பகீர் வாக்குமூலம்!! பெற்ற மகளை கொலை செய்து ஓடும் ரயிலில் இருந்து வீசியெறிந்த தாய்!!

 
ஓடும் ரயில்

 இந்தியாவின் வடமாநிலங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக பெற்ற மகளையே கொலை செய்து ரயிலில் இருந்து வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சுனிதா.இவருக்கு  5 குழந்தைகள். இவர்  கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சுனிதாவிடம் 2 குழந்தைகளும்,  அவருடைய கணவர் 3 குழந்தைகளும் இருந்தன. கணவனை விட்டுப் பிரிந்துவாழும் சுனிதாவுக்கு, சன்னி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 

ரயில்


இந்நிலையில், சுனிதா - சன்னி ஆகிய இருவருக்கும் 3 வயது பெண் குழந்தை கிரண் தொல்லையாக இருந்து வந்தான். இதனால்  இருவரும் சேர்ந்து, அந்தக் குழந்தையைக் கொலைசெய்யத் திட்டமிட்டனர்.திங்கட்கிழமை நள்ளிரவில், சுனிதா சன்னியின் உதவியுடன் தன்னுடைய மகள் கிரணை கழுத்தை நெரித்து கொலை செய்தார். காதலன் சன்னியின் உதவியுடன் உடலை ஒரு போர்வையில் போர்த்திக்கொண்டு ஸ்ரீகங்காநகர் ரயில் நிலையம் சென்றனர். அங்கிருந்து காலை 6.10 மணிக்கு ஒரு ரயிலில் ஏறிய இருவரும் ஃபதுஹி ரயில் நிலையத்துக்கு முன்பாக ஒரு கால்வாயில் குழந்தையின் உடலைத் தூக்கி எறிந்தனர்.  உடல் கால்வாயில் விழாமல், தண்டவாளத்திலேயே விழுந்து விட்டது. 

தண்டவாளம்


அதைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு சுனிதாவிடம் தீவிர விசாரணை நடத்தனர். விசாரணையில் சுனிதா தனது மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வழக்கு பதிவு செய்யப்பட்டு சுனிதாவும், கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சுனிதா தனது மகள் கிரணை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் பின்னர் சன்னியின் உதவியுடன் ஒரு பெட்ஷீட்டில் உடலைப் போர்த்திக்கொண்டு ரயிலில் இருந்து உடலை வீசியதாகவும் விசாரணையில் தெரிவித்தார். ரயிலில் இருந்து வீசப்பட்ட சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web