ரஜினியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் மூலம் ரஜினிகாந்த் எச்சரிக்கை!

 
ஐஸ்வர்யா ரஜினி

தனது புகைப்படத்தையோ, குரலையோ, பெயரையோ தனது முன் அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் அப்படி அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது வழக்கறிஞர் மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ரஜினி

ரஜினி, தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்திலும் ரஜினி நடிக்கிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் அவரது படம் வெளியாவதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

ரஜினி

இந்நிலையில், தனது பெயர், புகைப்படம், குரலை யாரும் விளம்பரத்திற்காகவோ வேறு எந்த விதமாகவும் முன் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று தனத் வழக்கறிஞர் இளம்பாரதி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ரஜினி

முறுக்கு கம்பி நிறுவனம் ஒன்று இப்படி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல், தனது விளம்பரங்களில் அவரது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தியிருப்பது தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் இப்படி பயன்படுத்துவதால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்படி ரஜினியின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பலர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர் என அந்த அறிவிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!


 

From around the web