பகீர் வீடியோ!! வேண்டாம் என சொன்னதால் ஆத்திரம்!! காதலியை சராமாரியாக கத்தியால் குத்திய காதலன் !!
இப்போதைய காதல்களில் தெய்வீகம் எல்லாம் கிடையாது. சொல் பேச்சு கேட்கலன்னா வெட்டு, குத்து, வெட்டி கூறுபோடு, ரயிலில் தள்ளி விடு, விஷம் வைத்து கொலை செய், ஆசிட் ஊற்று என குரூரமாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
டெல்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில், ஒரு இளைஞர் காதலியை கத்தியால் 6 முறை குத்தியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காயமடைந்த பெண் பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ படித்து வருகிறார்.
दिल्ली के आदर्श नगर में युवक ने गर्लफ्रेंड को 6 बार चाकू मारा| ब्रेकअप से नाराज था युवक।
— The Breaking News (@im_BreakingNews) January 4, 2023
- ब्रेकअप के बाद वजह जानने के लिए गली में बुलाया और हमला कर दिया।
- 5 साल पहले सुखविंदर से दोस्ती हुई, घरवालों के चलते दूरी बनाई।
- DU में लड़की पढ़ती है। अंबाला से पकड़ा गया आरोपी| #Delhi pic.twitter.com/0iB5Fap4T8
இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு சுக்விந்தருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது காதலை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்காததால், அந்த பெண் அவரை விலக்க ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த சுக்விந்தர், திங்கட்கிழமை காதலியை தனியாக வரும்படி அழைத்தார். பெண் வீட்டின் அருகே உள்ள தெருவில் அவரை சந்தித்து கத்தியால் பலமுறை தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு, தப்பியோடிய காதலனை சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கண்காணித்து அவரை அம்பாலாவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!