உஷார்! வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்! இந்த மாதம் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது!

 
வங்கி

ஆட்டம் பாட்டம் எல்லாம் அடுத்தடுத்து ரெண்டு மூணு நாளைக்கு தான். தொடர் விடுமுறை, பொங்கல் பண்டிகை என்று வருஷம் முழுக்க பொதி சுமக்கும் கழுதையாய் வேலைப் பார்த்து விட்டு, சொந்த பந்தங்களைப் பார்க்க சொந்த ஊர் தேடி பொங்கலுக்கு வந்திருக்கோம். பண்டிகையைக் கொண்டாடி விட்டு, மீண்டும் கூடு திரும்பும் பறவையாய் அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என  ஓட வேண்டிய தருணம். இந்நிலையில், வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பினால், இந்த மாதம் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காமல் இருக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. ஜனவரி 30 மற்றும் 31ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். விஷயம் இது தான். இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் பணி புரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இது குறித்து மும்பையில் நடைப்பெற்ற வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாட்டில் ஜனவரி 30, 31ம் தேதிகளில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!
அதற்கு முந்தைய இரு தினங்களும் வங்கி விடுமுறை தினங்களாக அமைந்திருக்கின்றன. அதாவது ஜனவரி 28ம் தேதி மாதத்தின் 4ம் சனிக்கிழமை விடுமுறை தினம். அடுத்த நாளான ஜனவரி 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  பொதுவான விடுமுறை தினம், ஜனவரி 30ம் தேதி  திங்கட் கிழமை, ஜனவரி 31 செவ்வாய் கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!

வேலைநிறுத்தம் குறித்து வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு துணைப் பொதுச் செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சம்பள உயர்வு, தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, புதிய ஊழியர்களை தேர்வு செய்வது, ஓய்வூதியத்தில் மாற்றம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இந்த கோரிக்கைகளை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தால் வேலை நிறுத்தத்தை தவிர வேறு வாய்ப்பில்லை என கூறியுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web