எச்சரிக்கையா இருங்க!! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்!!

 
மன்சுக் மாண்டவியா

கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு முறைகள் குறித்து நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனாவில் புதிய பரிமாணம் பற்றியும் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்திற்கு  மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா விடுத்த செய்திக்குறிப்பில் , ‘ மக்கள் பயப்பட தேவையில்லை. ஆனாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.’  என குறிப்பிட்டுள்ளார்

கொரோனா

மேலும், மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம், புதிய கொரோனா மாறுபாடுகள், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டுகொண்டு அதனை பின்பற்றலாம் என தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வந்த கொரோனா மெல்ல மெல்லகுறைந்து வந்தது. ஆனால் தற்போது சீனா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளன.ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள் தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வருவது தான் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவிலும் 3 பேருக்கு இந்த புதுவகையான வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் இந்த புதுவகையான வைரஸ் பரவ துவங்கியுள்ளது. 
இந்நிலையில், பிரதமர் மோடி புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.  முன்னதாக பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படுவது குறித்தும், இந்தியாவில் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web