உஷார்..! திடீரென வெடித்து சிதறிய ப்ரிட்ஜ்! வீடு முழுக்க பொருட்கள் சேதம்!

 
தீ ப்ரிட்ஜ் வெடிப்பு

பொதுமக்களே உஷாரா இருங்க... மழை காலத்துல இன்னும் ஜாக்கிரதையா இருங்க. இன்று திருச்சி மாவட்டம்,  முசிறி அருகே வீட்டில் இருந்த  பிரிட்ஜ் எதிர்பாராத வகையில் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பினார்கள். 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வீட்டில் இருந்த  குளிர்சாதன பெட்டி பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தீ ப்ரிட்ஜ் வெடிப்பு

திருச்சி மாவாட்டம் தொட்டியம் தாலுக்கா தோளூர்பட்டியில் விவசாயி மாசி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் உள் அறையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியது. இதில் தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் வைத்திருந்த பத்திரம், ஆவணங்கள், டிவி, பொருட்கள் உட்பட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

தீ ப்ரிட்ஜ் வெடிப்பு

இது குறித்த தகவல் அறிந்த முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், துணை தாசில்தார் கவிதா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மாசி குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அப்போது வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web