சரக்கு லாரி மோதி சிறுவன் பலி!! சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்!!

 
அகல்யன்

திருவாரூர் மாவட்டம் வடுவூர்  காரக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரன். இவரது மகன் 17 வயது அகல்யன். இவர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தான்.நேற்று அகல்யன், ஸ்கூட்டரில் மன்னார்குடி- தஞ்சாவூர் மெயின் ரோட்டில் எடகீழையூர் பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்றுள்ளான். 

விபத்து
அந்த பக்கமாக தஞ்சாவூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அகல்யனின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அகல்யனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸ்
ஆனால் சிறுவன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 37 வயதான  லாரி ஓட்டுநர் சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அகல்யனின் உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web