தமிழ்ல படிக்க முடியலை! முதலாமாண்டு கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை!

 
தீபா

மெட்ரிகுலேஷன் பாடத் திட்டத்தில் 12ம் வகுப்பு வரையில் படித்த சென்னை மாணவி, கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க முடியாததால், தீக்குளித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் மாணவிகள் தற்கொலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும்  நிலையில்,  அரசு இது குறித்து எந்தவொரு திட்டமும், நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற பணத்தை சரியான முறையில் (?) திட்டங்கள் வகுத்து செலவழிப்பது மட்டுமே அரசின் கடமையல்ல?! பெற்றோர்களுக்கும், மாணவ சமுதாயத்திற்கும் விழிப்புணர்வும், கவுன்சிலிங்கும் தர வேண்டிய முக்கிய பங்கு ஆசிரியர்களுக்கும், அரசுக்கும் இருக்கிறது. 

சென்னை ஆவடி மசூதி தெருவில் வசித்து வருபவர் பூங்குன்றன். இவர் கூலி தொழிலாளி செய்து வருகிறார். இவரது மூத்த மகள் தீபா (19). இவர் 12-ம் வகுப்பு வரை மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வந்துள்ளார். ப்ளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கல்லூரியில் அவர் கேட்ட பாடப்பிரிவு கிடைக்கவில்லை. இதனால் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ (தமிழ் இலக்கியம் ) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். 

fire

இந்த நிலையில் கல்லூரியில் தமிழ் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த மாணவி தீபா ஒரு கட்டத்தில் கல்லூரி படிப்பை நிறுத்தி விடுவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி கல்லூரிக்கு போக பிடிக்காமல் நேற்று மாலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 

மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் தீபாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்ந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி தீபா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Avadi-Tank-Factory-PS

இச்சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில வழிக்கல்வி படித்த மாணவி கல்லூரியில் தமிழில் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web