தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு !!

 
மழை

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் இந்த 7 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் நாளை மறுதினம் ஜனவரி 31ம் தேதியும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நகராமல் இன்றும் அதே இடத்தில் நீடித்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 31ம் தேதி அன்று தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

இந்நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web