இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்!

 
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! மிக கன மழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும், கனமழைக்கு இப்போதைக்கு வாய்ப்புகள் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அதோ என்று இதுநாள் வரையில் போக்கு காட்டிக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இந்நிலையில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வட தமிழகத்தில்  நிலவி வரும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம்,  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

மேலும் இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web