நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்! கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

 
கள்ளக்காதல்

நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த இளைஞர், மதுரை அருகே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாயமானார். பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத இளைஞர், திடீரென கிணற்றில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, ஒத்தக்கடை பட்டணம் பகுதியில் வசித்து வந்தவர் பெர் பெரியசாமி. இவரது மனைவி வள்ளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி பெரியசாமி  சிறைக்கு சென்றார். இந்நிலையில் மதுரை திருவாதவூர் முக்கம்பட்டி பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் தமிழரசன் என்பவர் பெரியசாமியை ஜாமீனில் எடுக்க முயன்றுள்ளார். இதன் பொருட்டு, அவரது மனைவி வள்ளியை சந்திக்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற நிலையில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.  பெரியசாமி சிறையில் இருந்த நிலையில் இருவரும் தனிமையில் தினந்தோறும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நண்பர்கள் மூலம் தமிழரசன் - வள்ளியின் கள்ளக்காதல் விவகாரம் பெரியசாமிக்கு தெரிய வந்துள்ளது. துரோகம் செய்த நண்பனை தீர்த்துக் கட்ட முடிவு செய்த பெரியசாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளார்.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியன்று மதுரை அப்பன் திருப்பதி அருகே குருத்தூர் கிராமத்திற்கு மது குடிக்க தமிழரசனை பெரியசாமி அழைத்து சென்றுள்ளார். மேலும் தனது நண்பர்களான ஒத்தக்கடை கொக்குளம் பகுதியை சேர்ந்த அக்கினி, ஒத்தக்கடை பட்டணம் பகுதியை சேர்ந்த நவீன், அழகேஷ், குணாளன், அழகர் ஆகியோரை அழைத்து சென்றுள்ளார்.

Madurai

மதுபோதையில் இருந்த தமிழரசனை பெரியசாமி மற்றும் அவரது நண்பர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். தமிழரசனின் உடலை ஏற்கனவே திருடி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் கயிறு மற்றும் துணிகளால் சுற்றி கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். இந்த விவகாரம்  ஏதுவும் தெரியாத தமிழரசன் குடும்பத்தினர் அவரை காணவில்லை என கடந்த செப்டம்பர் மாதம் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தமிழரசனை தேடி வந்துள்ளனர். இதனிடையே மற்றொரு திருட்டு வழக்கில் பெரியசாமி மற்றும் அவனது நண்பன் அக்கினி ஆகிய இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் பெரியசாமியின் நண்பனான நவீன் என்பவர் மது போதையில் தமிழரசன் கொலை செய்த விவகாரம் குறித்து நண்பர்களிடம் உளறியுள்ளார். இந்த தகவலை அறிந்து கொண்ட மதுரை போலீசார் உடனடியாக நவீனை பிடித்து தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர்.  

Madurai-Annanagar-PS

போலீசார் விசாரணையில் மது போதையில் இருந்த தமிழரசனை கொன்று உடலை கிணற்றில் வீசியதை ஓப்புக் கொண்டார். இதனையடுத்து குருத்தூர் பகுதிக்கு அழைத்து சென்று அவர் சொன்ன கிணற்றில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது முற்றிலும் அழுகிய நிலையில் தமிழரசனின் உடல் கிடைத்தது. அதனை மீட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

தமிழரசனை கொலை செய்த வழக்கில் பெரியசாமியின் நண்பர்களான நவீன், அழகேஷ், குணாளன் ஆகிய மூன்று பேரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில்  தலைமறைவான அழகர் என்பவரை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!