கல்லூரி மாணவி தற்கொலை! செல்போனால் வந்த விபரீதம்!

 
ஸ்ரீமதி

தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த மாணவி, செல்போனை கல்லூரிக்கு கொண்டு செல்லக் கூடாது என கண்டித்ததால், மன அழுத்தத்தில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் முரளிதரன். இவரது மகள் ஸ்ரீமதி (18). ஸ்ரீமதி, குரோம்பேட்டையில் உள்ள னியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், முரளிதரன், தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு  மனைவி மற்றும் மகனுடன் சென்று நிலையில், கல்லூரியில் தேர்வுகள் நடைப்பெற்று வருவதால் மாணவி ஸ்ரீமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

தேர்வு எழுத கல்லூரிக்கு சென்ற ஸ்ரீமதி, தேர்வு மையத்துக்கு செல்போன் எடுத்து சென்றுள்ளார். தேர்வறைக்கு செல்போன் கொண்டு வந்திருந்ததால், ஸ்ரீமதியை கல்லூரி நிர்வாகம் கண்டித்துள்ளது. அதன் பின்னர் ஸ்ரீமதியின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு ‘இனி மேல் கல்லூரி தேர்வு மையத்துக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று உங்கள் மகளை கண்டிக்கு ம்படி’ தெரிவித்துள்ளனர். 

Suicide

இதனால் ஊரில் இருந்தபடியே மகளிடம் பேசிய முரளிதரன், ஸ்ரீமதியிடம் கல்லூரி நிர்வாகத்தினர் கூறிய விஷயத்தைத் தெரிவித்து, ‘இனிமேல் கல்லூரிக்கு செல்போன் எடுத்து செல்லக் கூடாது. வீட்டிலும் செல்போனை அதிகம் பயன்படுத்தக் கூடாது’ என மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.

பெற்றோர் கண்டித்ததால் ஸ்ரீமதி மிகவும் மனவேதனை அடைந்தார். சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர் மீண்டும் தொடர்பு கொண்ட போது ஸ்ரீமதி செல்போனை எடுக்கவில்லை நேற்று காலை மீண்டும் ஸ்ரீமதியை அவரது பெற்றோர் செல்போனில் அழைத்த போது அவர் போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பக்கத்து வீட்டில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு வீட்டில் சென்று பார்க்கும் படி கூறினர்.

Chitlapakkam

அதன்படி அவர்கள் முரளிதரன் வீட்டுக்கு சென்று பார்த் தபோது, அங்கு வீட்டின் உள்ளே மாணவி ஸ்ரீமதி தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிட்லபாக்கம் போலீசார், தூக்கில் தொங்கிய ஸ்ரீமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஸ்ரீமதியின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web