கோவில் திருவிழாவில் யானைகளுக்குள் மோதல்! வைரலாகும் வீடியோ!

 
யானை சண்டை

கேரளாவில் திருவிழாவுக்கு வந்த இரண்டு யானைகளுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கேரள பாலக்காடு மாவட்டத்தில், சிவன் கோவில் ஒன்றில் திருவிழாவுக்காக பக்தர்கள் கூடியிருந்த நிலையில், கோவில்திருவிழாவுக்காக மூன்று யானைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. இந்த யானைகளை தனித்தனியே பாகன்கள் அழைத்து வந்திருந்தனர்.

கோவிலில் திருவிழா துவங்குவதற்கு முன்பாக மூன்று யானைகளுக்கும் தனித்தனியே நெற்றி பட்டம் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டன. இந்நிலையில், திடீரென இரண்டு யானைகளுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது. திடீரென இரண்டு யானைகளும் சண்டையிட்டதும், அங்கு கூடியிருந்த பக்தர்கள் கூட்டம் சிதறி ஓடினார்கள். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களின் வாகனங்களை இரண்டு யானைகளும் சேர்ந்து அடித்து துவம்சம் செய்தன. 

யானைகள் சண்டையிட்டதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. பாகன்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு, நீண்ட நேரமாக போராடி பின்னர் யானைகளை சமாதானம் செய்தனர். செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web