அசத்தல்! 7 வயது தமிழக சிறுமி உலக சாதனை! குவியும் பாராட்டுக்கள்!
திருவள்ளூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ரிதன்யா உலக சாதனைப் படைத்துள்ளார். குழந்தைகள் தங்களது மழலை மொழியில் பேசுவதை அனைவரும் ரசிப்போம். வார்த்தைகளில் விளக்கம் இல்லாமல் தனக்கே உரிய மொழியில் அழகாக பேசும் குழந்தைகளை நாம் கண்டிருப்போம். ஆனால் 7 வயது சிறுமி, தனது வார்த்தை வித்தைகளால் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளூரை சேர்ந்த 7 வயது சிறுமி 42 விநாடிகளில் 35 டங் ட்விஸ்ட்டர்களை கூறி அசத்தியிருக்கிறார். சிறுமியின் இந்த சாதனை, உலக சாதனையாகவும் பதிவாகி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் - கனிமொழி தம்பதியரின் 7 வயது மகள் பி.ரிதன்யா . இவர் அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி ரிதன்யா, 42 விநாடிகளில், 35 ஆங்கில நா பிறழ் வாக்கியங்களை அடுத்தடுத்துக் கூறி உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை' ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.
சாதனை படைத்த மாணவி ரிதன்யாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் திருஞானம், தாளாளர் தேன்மொழி ஆகியோர் தலைமையில் நடந்த விழாவில், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பங்கேற்று, மாணவி ரிதன்யா மற்றும் அவர்களது பெற்றோர்களை வெகுவாக பாராட்டி கவுரவித்தனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!