கொடூரம்!! காதலியை உயிருடன் எரித்து கொலை !! காதலன் பகீர் வாக்குமூலம்!!

 
பூஜா

காதலில்  மனஸ்தாபங்கள் ஏற்பட்டால் காதலியை எரித்து கொலை , வெட்டி நாய்களுக்கு போடுவது, ஆசிட் ஊற்றுவது என கொடூரங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதே போல் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையத்தில்  வசித்து வருபவர் 19 வயது பூஜா.

பூஜா

இவர்  அதே பகுதியில் வசித்து வரும் லோகேசை காதலித்து வந்தார். லோகேஷ் ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் லோகேஷ் மற்றும் பூஜா இருவரும் இன்று தனியாக காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது பூஜா லோகேஷிடம் உடனடியாக திருமண செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் பூஜாவை கல்லால் அடிக்கத் தொடங்கினார். தலையில் பலத்த காயத்துடன் மயக்கமடைந்த பூஜா மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். பூஜா உடல் முழுவதும் தீயால் எரிந்த நிலையில் காப்பாற்றுங்கள் என அலறி கொண்டே காட்டு பகுதியிலிருந்து ஓடி வந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

எரித்து கொலை


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து போலீசார் லோகேஷை தேடி வந்த நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் மயக்கம் வருவதாக கூறி லோகேஷ் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் உடலில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  காவல்துறையினர் லோகேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web