திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை!! பகீர் பிண்ணனி!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் வசித்துவருபவர் திவாகர் . இவருடைய மனைவி ரஞ்சனி.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். இவர் பொன்னேரி பகுதியின் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக திவாகருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் முனிரத்தினாவுக்கும் கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை முனிரத்தினாவின் முன்னாள் காதலன் பார்த்து விட்டார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என திவாகரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனர். அதன்படி திவாகரிடம் ரூ10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். ஆனால், திவாகர் பணம் தர முடியாது என்று கூறிவிட்டதால் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
திவாகரை சந்தித்த முனிரத்தினாவின் தாய், ‘வீடியோ ஊர் முழுவதும் பரவி விட்டது; எனவே, என் மகளை நீ தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ எனவும் கூறியதால் திவாகர் விரக்தி அடைந்தார். இதனால் மன அழுத்தத்தில் திவாகர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முனிரத்தினாவின் முன்னாள் காதலன், முனிரத்தினா, அவரது தாய் மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் தலைமறைவானதை அடுத்து தனிப்படை அமைத்து அவரை தேடும்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன .
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!