தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்!! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!!

 
ரியா

எத்தனையோ முன்னேற்றங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்த போதிலும் ஒரு சில விஷயங்கள் இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக கணவர் இறந்த பிறகு பெண்களுக்கு மறுமணம் என்பது இன்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகின்றன. அப்படி பல சம்பவங்கள் சமீப காலங்களில் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் தமிழ்நாட்டில் தனது தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் தனது தாய்க்கு, மகள் ஒருவர் வரன் தேடியதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரியா

இந்நிலையில் இதேபோன்ற நிகழ்வு  மும்பையில் நடைப்பெற்றுள்ளது.  மும்பையைச் சேர்ந்த ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி என்ற பெண் தனது தாயார் மவுசுமிக்கு மறுமணம் செய்து வைத்து உள்ளார்.  இதுகுறித்து ரியா கூறி இருப்பதாவது,  அப்பா இறந்த பிறகு, அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடிபெயர்ந்தேன், நான் அங்கு வளர்ந்தேன், எனக்கு 2 வயது, அப்போது அம்மாவுக்கு 25 வயது. 'நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் எனது தயார் மறுத்து விட்டார்.

நான் திருமணம் செய்து கொண்டால் எனக்கு அன்பு கிடைக்கும் ஆனால் என் மகளுக்கு ஒரு தந்தை கிடைக்க மாட்டார் என்று கூறுவார்" தற்போது அம்மாவுக்கு நான் ஒரு துணையைக் கண்டுபிடித்தேன், நானும் ஒரு அப்பாவைக் கண்டறிந்தேன் என்பதை அப்போது நான் உணர்ந்தேன். அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாள், அது என்னை மிகவும் மகிழ்ச்சியாக்குகிறது" என்று கூறி உள்ளார். தற்போது இந்த மறுமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web