முட்புதரில் பெண் சடலம்!! மாடு மேய்க்க சென்ற போது பயங்கரம்!!

 
போலீஸ்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சீலக்காம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 50 வயது ராஜேந்திரன். இவர்  மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 46 வயது நாகவேணி இவர்களுக்கு  ஒரு மகளும், மகனும் உள்ளனர். நாகவேணி தினமும் பொள்ளாச்சி-உடுமலை எல்லை பகுதி புதுப்பாளையத்தில் தோட்டத்திற்கு  மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்வார்.

போலீஸ்

அதே போல் நேற்றும் வழக்கம் போல்  காலை மாடுகளை அழைத்து கொண்டு தோட்டத்துக்கு அழைத்து என்றார். அவருடைய மனைவி  நாகவேணி, மாலை கடந்தும் மாடுகளுடன் வீட்டுக்கு வராததால் ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.  தனது உறவினர்களுடன் நாகவேணியை தேடி தோட்டத்திற்கு சென்றார். மாடுகள் மட்டும் வந்து கொண்டிருந்தன. நாகவேணியை காணவில்லை. பெரும் பதட்டத்துடன் ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் நாகவேணியை அப்பகுதியில் தீவிரமாக தேடினர். அங்குள்ள முட்புதரில் நாகவேணி ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். இது குறித்து உடனடியாக  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  நாகவேணியின் தலைப்பகுதி சாக்கு மூட்டையால் கட்டப்பட்டிருந்தது.அவரது உடலில் ஆடைகள் இல்லை. செடி, கொடிகளால் மூடப்பட்டிருந்தது. 


இதனால் மர்மநபர்கள் மாடுகள் மேய்த்து விட்டு வந்து கொண்டிருந்த நாகவேணியை முட்புதருக்குள் தூக்கி சென்று கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து  நாகவேணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நாகவேணி உயிரிழந்து  கிடந்த பகுதி உடுமலை-பொள்ளாச்சி எல்லை பகுதி என்பதால் கொலை குறித்து யார் விசாரிப்பது என்பது தொடர்பாக போலீசாருக்கு இடையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

அதன்பிறகு நாகவேணி இறந்து கிடந்த பகுதி திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து  போலீசார் நாகவேணி கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகவேணியை கொன்ற கும்பல் யார், பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாடு மேய்க்க சென்ற பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web