கண் திருஷ்டி நீங்க தை வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்து பாருங்க!!

 
கண் திருஷ்டி

கண் திருஷ்டி நீங்குவதற்கு வெள்ளிக்கிழமைகள் இதைச் செய்தா போதும். அதுவும் இன்று தை மாதத்தில் வருகிற விசேஷ வெள்ளிக்கிழமை. இந்த வெள்ளிக்கிழமையை மிஸ் பண்ணாம இன்றே இதைச் செய்து பாருங்க. ஏன் தை மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமைகளை விசேஷமான வெள்ளிக்கிழமை என்கிறோம்? ஆடி வெள்ளிக் கிழமைகள் தானே விசேஷம்? பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்தவையான நாளாக இருக்கும். அதுவும் தை மாதத்தின் வெள்ளிக்கிழமை கூடுதல் விசேஷம். உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும் அம்மன் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். இன்று, அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளலாம். 

தை வெள்ளி

தை மாத வெள்ளிக்கிழமைகளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கினால் நம்மையும், நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வார்.எப்படி ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்கிறோமோ, அதே போல் ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதனால் தான் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.

தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை! இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

தை மாத வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மைகள் யாவும் கிடைக்கும். முடிந்தால், அம்மனுக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சார்த்தி அம்மனை இன்று வணங்குவது சிறப்பு.வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும், கண் திருஷ்டியையும்  நீக்கும்.

தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை! இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

தை வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சன்னிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.  தை வெள்ளிக்கிழமைகளில், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி அம்மனை வழிபட்டு வந்தால் தனம், தானியம் பெருகி நிறைவான வாழ்க்கையை வாழலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web