இதப் பார்றா!! திருமணப்பரிசாக புல்டோசர்!! வைரலாகும் லேட்டஸ்ட் டிரெண்ட்!!
உத்தரப் பிரதேசத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை பல சர்ச்சைக்குள்ளான விமர்சனங்களும், நிகழ்வுகளும் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் வீடுகள் உடமைகள் மீது புல்டோசர் கொண்டு இடிக்கும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி குற்றவாளிகளுக்கு பயம் தரவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார். அவருக்கு புல்டோசர் பாபா என தொண்டர்கள் பெயர் வைத்துள்ளனர். இந்த புல்டோசர் மாடலை பல மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிரெண்டை பார்த்து உத்தரப் பிரதேசத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது மகளின் திருமண பரிசாக புல்டோசர் இயந்திரத்தை பரிசாக தந்துள்ளார்.
அம்மாநிலத்தின் ஹமீர்பூர் பகுதியில் வசித்து வருபவர் பரசுராம் பிரஜாபதி. இவரின் மகள் நேகாவுக்கும் கடற்படை வீரரான யோகேந்திர பிரஜாபதிக்கும் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமண பரிசாக மாப்பிள்ளை மற்றும் பெண்ணுக்கு ஆடம்பர காரை தான் பரிசாக வழங்குவர். ஆனால், பரசுராம் தனது மகளுக்கு புல்டோசரை பரிசாக தந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!