செல்வம் செழிக்க தேய்பிறை ஏகாதசி மிஸ் பண்ணாதீங்க! விரதமுறையும், பலன்களும்!

 
இன்று ஐஸ்வர்யங்களை அருளும் இந்திர ஏகாதசி!

தேய்பிறையில் வருகின்ற ஏகாதசியை மிஸ் பண்ணாதீங்க. எப்படி விரதம் இருப்பது? என்ன பலன்கள் என்று பார்க்கலாம் வாங்க. வருடத்தின் அனைத்து ஏகாதசிகளுமே சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வருவது வழக்கம்.  தேய்பிறை ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் அனைவருமே பித்ருக்களின் ஆசியுடன் ஐஸ்வர்யமும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. தொடர்ந்து  இந்த விரதத்தை கடைப்பிடித்திட இந்திர லோகத்தையே ஆளும் பேறு பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. 

இத்தனை சிறப்புகளை உடைய  ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து நீராட  வேண்டும்.  வீட்டிற்கு  அருகில் அமைந்திருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய  வேண்டும். கோவிலில் இருந்து வரும் போது சுவாமியை வீட்டிற்கு அழைத்து வருவதாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்து விஷ்ணுவின் படங்கள், சிலைகளுக்கு துளசி, பூக்கள் சாற்றி, விளக்கேற்றலாம். 

இன்று இந்திர ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?


வீட்டிற்கு அருகில் இருக்கும் நெல்லி மரத்திற்கு தீப ஆராதனை காட்ட வேண்டும். தொடர்ந்து லட்சுமி மந்திரங்களை கூறி வழிபட வேண்டும். காலை முதல் மாலை வரை துளசி நீர் அருந்தி உபவாசம் இருக்கலாம் நாள் முழுவதும் விஷ்ணு புராணம், பெருமாள் ஸ்தோத்திரம் இவைகளை மனதில் துதித்த படியே அன்றாட வேலைகளை தொடரலாம்.நாள் முழுவதும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் மனதில் விஷ்ணுவை நினைத்து பால் , பழம் எடுத்துக் கொள்ளலாம். 

இன்று இந்திர ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

மாலையில் மீண்டும் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்த பிறகு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த முறையில் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அவர்களின் பல தலைமுறை முன்னோர்கள் நற்கதி பெறுவார்கள். ஆசிகள் கிடைக்கப்பெறுவதுடன் செய்யும் செயல்களில் மகத்தான வெற்றி கிட்டும். ஐஸ்வர்யம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் பெறுவோம். 

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம

From around the web