மிஸ் பண்ணீடாதீங்க!! நாளை ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தைவெள்ளி !! வழிபடும் முறை, பலன்கள்!!

 
அம்பிகை

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோர் பழமொழி. நம் கஷ்டங்கள் எல்லாம் பறந்தோடி விடும். விசேஷங்களின் நாயகி தை மகள். ஒவ்வொருவரின் இல்லத்திலும் தை மகளை அத்தனை ஆரவாரத்துடனும், ஆசையுடனும் வரவேற்கிறோம். இந்த தை மாதம் முழுவதுமே அம்பிகையை வழிபாடு செய்திட கோடி நன்மை தேடி வரும் . அதிலும் குறிப்பாக தவறாமல் தை மாத வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் விளக்கு ஏற்றி வழிபட்டு வர சகல நன்மைகளும் கிடைக்கும். வீட்டிலேயே இன்றைய தினம் அம்பிகை வழிபாடு செய்தால் வெற்றிகள் குவியும். வேதனைகள் அகலும். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அற்புதப் பலன்கள் கைமேல் கிடைக்கும்.

ஏன் தை மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமைகளை விசேஷமான வெள்ளிக்கிழமை என்கிறோம்? ஆடி வெள்ளிக் கிழமைகள் தானே விசேஷம்? பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்தவையான நாளாக இருக்கும். அதுவும் தை மாதத்தின் வெள்ளிக்கிழமை கூடுதல் விசேஷம். உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும் அம்மன் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். இன்று, அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளலாம்

செல்வ வளம் தரும் ஆடி வெள்ளி வழிபாடு!

தை வெள்ளிக்கிழமை அன்று காலையில் வீட்டைச் சுத்தம் செய்து கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி மகாலட்சுமியை வரவேற்க வேண்டும். வீட்டு வாசலில் தாமரை, இதயக்கமலம், ஐஸ்வர்யக் கோலம் இடலாம். ‘திருமகளே வருக’ என்றும் கோலமாவை வைத்து எழுதலாம். அதிகாலையில் கதவைத் திறக்கும் பொழுது அஷ்டலட்சுமிகளின் பெயரையும் உச்சரித்து கதவை திறக்க வேண்டும். இல்லத்து பூஜையறையில் மகாலட்சுமி படம் வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி நடுநாயகமாக விநாயகர் படம் வைத்து லட்சுமி கவசம், லட்சுமி துதிகள், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்கர நாமம், சௌந்தர்ய லஹரி இவற்றை பாடுவது சிறப்பு.

செல்வ வளம் தரும் ஆடி வெள்ளி வழிபாடு!

அம்பிகைக்கு ‘சக்தி’ என்ற பெயருமுண்டு. எந்தக் காரியத்தை செய்தாலும் ‘சக்தி இருந்தால் செய்.. இல்லையேல் சிவனே என்றிரு’ என்பது ஆன்றோர்கள் வாக்கு. மனிதனின் செயல்பாடுகளுக்கு உடலில் உள்ள சக்தியும், அருள் கொடுக்கும் சக்தியான அம்பிகையும் தான். அந்த சக்தியை தான், ‘காமாட்சி’ , ‘மீனாட்சி’ ‘விசாலாட்சி’, ‘உண்ணாமலை’ ,‘அகிலாண்டேஸ்வரி’ ‘புவனேஸ்வரி’ , ‘திரிபுரசுந்திரி, காந்திமதி, பெரியநாயகி, தையல்நாயகி’ என பல்வேறு வகையான பெயர்களால் வழிபாடு செய்து வருகிறோம்.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட அம்பிகையை முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற தினமாக அமைவது வெள்ளிக்கிழமைகளே. கல்வி, குழந்தைப் பேறு, குடும்பப் பிரச்சினை, திருமண யோகம் , வாழ்வில் செல்வம், மன அமைதி என அனைத்து நன்மைகளும் அடுக்கடுக்காக வந்து சேர ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபாடு செய்வோம். அவள் அருளால் கோடி இன்பம் பெறுவோம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web