பெண்களே உஷார்! மெட்ரோ ரயில் கதவில் சிக்கிய ஆடை! நடைமேடையில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஓடும் ரயில் பெண் ஒருவரை நடைமேடையின் நுனிக்கு இழுத்துச் சென்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சம்பவத்தன்று மாலை 4.10 மணியளவில் சாகலா ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் பெட்டியின் கதவுகளுக்கு இடையே ஆடை சிக்கிய நிலையில் பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதை வீடியோவில் காணலாம். அருகில் நின்றிருந்த பயணி ஒருவர் காப்பாற்ற முயன்ற நிலையில், அது பலனளிக்காமல், அந்த பெண் ரயிலுடன் இழுத்துச் செல்லப்பட்டார்.
ரயில் வேகம் வேகம் அதிகரித்து, அந்த பெண்ணை நடைமேடையின் தண்டவாளத்தின் முனைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர், ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த வீடியோவில், பயணிகளை காப்பாற்றவோ அல்லது ரயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட சொல்லி தகவல் கொடுக்கவோ, ரயிலை நிறுத்தவோ ரயில் நிலையத்தில் காவலர்கள் இல்லை என்பது தெளிவாகத் காட்டுக்கிறது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காயம் அடைந்த பெண் கவுரி குமாரி சாஹு என தெரியவந்தது, அவர் அந்தேரியில் உள்ள செவன் ஹில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மருத்துவ செலவுகளை மும்பை மெட்ரோ ஒன் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
Clip shows woman being dragged till end of platform after her dress gets stuck in #Mumbai #Metro train’s door #Nukkadlive @Metro @MumbaiMetro3 @MumbaiMetro01 pic.twitter.com/JmZ9yOivfb
— Nukkad Live (@Nukkadlive1) December 31, 2022
இதற்கிடையில், சாஹு மெட்ரோ ஒன் நிறுவனத்திற்கு எதிராக சாகலா காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை விளக்கி தான் படுகாயம் அடைய காரணமான மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!