வாகன ஓட்டிகளே உஷார்!! நாளை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளை டிசம்பர் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் சென்னையில் மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற இருப்பதால் அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, திரு.வி.க பாலத்தில் இருந்து 3வது அவென்யூ மற்றும் 2வது அவென்யூ நோக்கி வரும் அனைத்து உள்வரும் வாகனங்களும் எம்எல் பார்க் - இடதுபுறம் திரும்பி - எல்பி சாலை - சாஸ்திரி நகர் 1 வது அவென்யூவில் திருப்பி விடப்படும்.திரு.வி.க பாலத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் (எம்டிசி பேருந்துகள் உட்பட) எம்எல் பூங்காவில் திருப்பி விடப்படும் - இடது- எல்பி சாலை- சாஸ்திரி நகர் 1வது அவென்யூ-சாஸ்திரி பேருந்து நிலையம்- 2வது அவென்யூ- 7வது அவென்யூ சந்திப்பு -வலது- எம்ஜி சாலை - எல்பி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
லைட் ஹவுஸில் இருந்து சாந்தோம் ஹை ரோடு மற்றும் மந்தைவெளி சந்திப்பில் இருந்து தெற்கு கால்வாய் கரை சாலை, அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கெனால் பேங்க் ரோடு சந்திப்பில் இருந்து டி.வி.கே பாலத்திற்கு செல்ல முடியாது. இந்த வழியாக நுழையும் வாகனங்கள் மந்தவெளி சந்திப்பு ஆர்.ஏ மன்றம் இரண்டாவது பிரதான சாலை வழியே செல்ல வேண்டும், மேலும் போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப தடுப்புகள் மற்றும் கூம்புகள் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே மடம் சாலை மற்றும் பிராடி கேஸ்டல் சாலை வழியாக அடையார் வழியாக செல்ல தடை. இந்த வழியாக வரும் வாகனங்கள் இசைக் கல்லூரி சந்திப்பிலிருந்து, டிஜிஎஸ் தினகரன் சாலை வழியாக திருப்பி விடப்படும் எனத் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!