எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து!! பயணிகள் அலறி அடித்து ஓட்டம்!!
விஷ்ணு ஆலயங்களில் உலகப்பிரசித்தி பெற்ற ஆலயம் திருப்பதி. இந்தியா முழுவதிலும் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருகை தருவர். இவர்களின் வசதிக்காக பல மாநிலங்களில் இருந்தும் திருப்பதிக்கு ரயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விசாகப்பட்டினத்தில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
வழக்கம் போலவே இன்றும் அதிகாலை 4 மணிக்கு இந்த ரயில் புறப்பட்ட தயாரானது. பயணிகள் ஏறி கொண்டிருந்த போது முன்பதிவு பெட்டியான எஸ் 6 ல் உள்ள கழிவறையில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. பயணிகள் கூச்சலிட்டபடி அவசர அவசரமாக தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு ரயிலை விட்டு கீழே இறங்கினர்.
கூச்சல் , குழப்பத்தால் ரயிலின் பக்கத்து பெட்டிகளில் இருந்த பயணிகளும் இறங்கி விட்டனர். இது குறித்து உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கழிவறையை திறந்தனர். தீத்தடுப்பான் கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர்.இது குறித்த முதற்கட்ட விசாரணையில், கழிவறையில் ரயில்பயணி ஒருவர் சிகரெட் பிடித்துவிட்டு அங்கிருந்த குப்பைத் தொட்டியில் அதை எரிந்து விட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் குப்பைகள் எரிந்ததோடு கழிவறை முழுவதும் எரிந்தது தெரிந்தது. ரயில் புறப்படுவதற்கு முன்பு கவனிக்கப்பட்டு விட்டதால் பெரும்அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ரயில் புறப்பட்டு சென்றது. ரயிலுக்கு தீ வைத்த மர்மநபர் ஆசாமி குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!