நடுரோட்டில் பிரபல நடிகை சுட்டுக் கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்த போது ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி, மேற்கு வங்க நெடுஞ்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று காலை 6 மணிக்கு ராஞ்சியில் இருந்து நடிகை ரியா குமாரி கணவர் மற்றும் குழந்தையுடன் கொல்கத்தாவுக்குச் சென்றபோது, மேற்கு வங்க நெடுஞ்சாலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்
காரை நடிகை ரியா குமாரியின் கணவர் பிரகாஷ் குமார் ஓட்டி சென்றுள்ளார். அவர்களுடன் அவர்களது மூன்று வயது மகளும் பயணித்துள்ளனர். போலீசாரிடம் நடிகை ரியா குமாரியின் கணவர் அளித்த வாக்குமூலத்தின் படி, ஹவுரா மாவட்டத்தின் உலுபெரியா சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பாக்னான் என்ற இடத்தில் உள்ள மகிஷ்ரேகா பாலம் அருகே இயற்கை உபாதைகளுக்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
அப்போது, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில், மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியுடன் இவர்களின் வாகனத்தின் அருகே வந்துள்ளனர். கொள்ளையர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தம்பதிகள் எதிர்க்க முயன்றபோது, நடிகை ரியா மீது மர்மநபர் ஒருவர் சுட்டார். உடனே அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
@MamataOfficial @HemantSorenJMM Jharkhand Actress Riya Kumari Shot Dead On Bengal Highway! a CBI inquiry must be ordered. pic.twitter.com/DYNF1Op9DN
— Adv. Satya Prakash (@AdvJournosatya) December 28, 2022
கணவர் பிரகாஷ் குமாரின் வாக்குமூலத்தின் படி, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதால், அவர் அருகில் உள்ள பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடிகை ரியாவை உடனடியாக உலுபெரியா சப்-டிவிஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் நடிகை ரியா இறந்து விட்டார்.
போலீசார் விசாரணையை தொடங்கி, பிரகாஷ்குமாரிடம் மேலும் விவரங்களுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!