பிரபல நடிகையை கணவனே சுட்டுக் கொன்ற கொடூரம்! தனியே தவிக்கும் 2 வயது மகள்!

 
ரியா

கணவர், 2 வயது குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்த பிரபல நடிகை ரியா குமாரி, கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்ட நிலையில், நடிகையின் கணவரே ரியா குமாரியைச் சுட்டுக் கொன்றது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அம்மா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அப்பா கைது செய்யப்பட்டு சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். 2 வயது மகள் அனாதையாக நிற்கிறாள்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ‘வா சல்சித்ரா’ சின்னத்திரை தொடர் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரியா குமாரி. நடிகை ரியாவும், அவரது கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ் குமாரும் அவர்களது இரண்டு வயது மகளும் காரில் தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

ரியா

பாக்னன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே சென்று கொண்டிருந்த போது, நீண்ட நேர பயணத்தால், சற்று ஓய்வெடுத்துக்கொள்ள நெடுஞ்சாலை ஓரமாக பிரகாஷ் குமார் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, திடீரென மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவரைத் தாக்கி, அவரது பொருட்களை கொள்ளையடிக்க முயன்றதாகவும், அவர்கள் நடிகையை சுட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தார். 

அதன் பின்னர் குமார் தனது மனைவியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சுமார் 3 கி.மீ. குல்காச்சியா - பிர்டாலாவில் நெடுஞ்சாலையில் உதவிக் கேட்டு கெஞ்சியுள்ளார். பின்னர் ரியா குமாரியை உலுபெரியாவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

riya kumari husband

இந்நிலையில், போலீசார் நடிகை ரியாவின் குழந்தையிடமும், கணவரிடம் தனித்தனியே விசாரித்தனர். கணவரே சுட்டுக் கொன்றது அம்பலமானது. பின்னர் கணவரிடம் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்ததில், நடிகை தன்னை விட அதிகளவில் சம்பாதித்ததால், தன்னை மதிக்கவில்லை என்றும், லாங் ட்ரைவ் செல்லலாம் என கூறி அழைத்து சென்று சுட்டுக் கொன்றதும் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசார், நடிகை ரியாவின் கணவரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web