டி 20 போட்டிகளிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் விலகல்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
சஞ்சு சாம்சன்

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய முதல் டி-20 போட்டி  ஜனவரி 3ம் தேதி செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா கடைசி வரை இழுபறியாக இருந்து பின்னர் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சஞ்சு சாம்சன், இந்த போட்டியில் விளையாடும் போது இடது முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் சஞ்சு சாம்சன், இந்த டி-20 தொடரிலிருந்து விலகியுள்ளதாக ஐசிஐசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் கலந்து கொள்கிறது. இதில்  டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணி

அதே போல் டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகிய முண்ணனி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும்  இடம் பெற்றுள்ளனர். இதில்  இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் இந்திய  அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியை பொறுத்தவரை  சொந்த மண்ணில் இதுவரை நடந்த அனைத்து டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது. அதே போல்  இந்த முறையும்  அனைத்து  போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்யும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web