மகள் கண் முன்னே துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி!! பயங்கரம்!!
சமீபகாலமாக குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இளைய தலைமுறை சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் வசித்து வருபவர் தாராசந்த் காட்ஸ்வாரா. இவர் தன்னுடைய மகளை கோச்சிங் சென்டரில் சேர்த்து விடுவதற்காக அழைத்துச் சென்றார். அந்த சமயத்தில் அதே பகுதியில் ஒரு ரவுடி கும்பல் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் மகள் கண்முன்னே தாராசந்த் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிரிழந்தார்.
அதே நேரத்தில் ராஜூ தேத் என்ற பிரபல ரவுடியும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த காட்சியில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளது. பிரபல ரவுடி ராஜூ தேத்தை கொலை செய்ய இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏராளமான கோச்சிங் சென்டர்கள் செயல்பட்டு வருவதால் தவறுதலாக அவர் மீதும் குண்டு பாய்ந்துவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ரவுடி ராஜூ தேத்தின் சகோதரரும் சிகார் நகர் பிப்ராலி சாலையில் ஒரு கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார். அந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தான் தாராசந்த் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ரோஹித் கோடாரா பழிவாங்கும் செயலுக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இவர் லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டாளி என தன்னை அறிமுகம் செய்து ண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்பால்சிங் மற்றும் பல்பீர் பனூடா இவர்களை பழி வாங்கும் செயல் தான் இது எனப் பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் இந்த படுகொலையை கண்டித்து சிகார் நகரில் கடையடைப்பிற்கு அவரது ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் காவல்துறை தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பட்டப்பகலில் 2 பேர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!