மருமகனை ஆணவக் கொலை செய்த மாமனார்!! பகீர் வாக்குமூலம்!!
கர்நாடகா மாநிலத்தில் பாகல்கோட்டை மாவட்டத்தில் வசித்து வருபவர் 34 வயதான புஜபலி கர்ஜகி. இவர் அதே கிராமத்தில் வசித்து வரும் பாக்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கு பாக்யஸ்ரீயின் தந்தை தம்மனகவுடா பட்டீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருவீட்டு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த சில மாதங்களுக்கு முன் பாக்யஸ்ரீ, புஜபலி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் இரவு புஜபலியும், அவரது உறவினரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.அந்த பக்கமாக காரில் வந்த தம்மனகவுடா மற்றும் அவரது உறவினர்களும் அவர்களின் இருசக்கர வாகனத்தினை வழிமறித்தனர். அவர்கள் கீழே இறங்கும் முன் புஜபலியையும், அவருடைய உறவினரையும் தாக்கத் தொடங்கினர். தப்பி ஓட முயன்ற போது கண்களில் மிளகாய்பொடியை தூவினர்.
அத்துடன் புஜபலியை 4 பேரும் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் கொடூரத்தால் புஜபலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த காவல்துறை புஜபலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. அத்துடன் வழக்குபதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்ட விசாரணையில் காதல் திருமணம் செய்ததால் புஜபலியை, பாக்யஸ்ரீயின் தந்தை ஆணவ கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதன் பேரில் தம்மன்னகவுடாவை கைது செய்துள்ளனர். அத்துடன் அவருடன் சேர்ந்து கொலை செய்த அவரது உறவினர்கள் 3 பேரையும் காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!