உணவு பதப்படுத்தல் அமைச்சர் காலமானார்!! முதல்வர் இரங்கல்!!

 
சுப்ரதா சாஹா

மேற்கு வங்க மாநில அமைச்சர் சுப்ரதா சாஹா. இவருக்கு வயது  72. மேற்கு வங்க  மாநிலத்தில்  உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர். சுப்ரதாவுக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை கொல்கத்தாவில் நடைபெற்றது. மருத்துவமனையில் இருந்த அவர் குணமடைந்து நேற்று காலை வீடு திரும்பினார். அவருக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து  முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


.சுப்ரதா சாஹா

இது குறித்து  மம்தா பானர்ஜி வெளியிட்ட இரங்கல் செய்தியில் . "சுப்ரதா சாஹாவுடன் எனக்கு நீண்ட நெடிய உறவு இருந்தது. அவரது அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். சுப்ரதா சாஹாவின் மறைவால் அரசியல் உலகில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்

இவர் தொடர்ந்து 3 முறை சட்ட உறுப்பினராக இருந்து வந்தார். சுப்ரதா முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.  இவர் 2011, 2016 மற்றும் 2019  என தொடர் வெற்றிகளைப் பெற்றவர்.

rip

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web