அடி தூள்!! 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ!! ரயில் பயணிகள் உற்சாகம்!!
சென்னையில் நகரின் முக்கிய பகுதிகள் மெட்ரோவால் இணைக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் தீவிரமாக மெட்ரோ ரயில் நிர்வாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இந்த வழித்தடத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
தற்போது பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் கூடுதல் மெட்ரோ சேவைகளை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி 3 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்களை இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மெட்ரோ ரயில் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சேவையை விரைவுபடுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ரயில் இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கு முன் கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. மிக விரைவில் முழுமையாக இத்திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!