அடி தூள்!! 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்தவர்களுக்கு ரூ.2000 ரொக்கப்பரிசு!! சான்றிதழ்கள்!!

 
திருச்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி  மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள்  தேசியக் கொடி ஏற்றி வைத்து
ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்கள்.திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்  மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர்   மரு. இரா.வைத்திநாதன்,இ.ஆ.ப.,  துணைமேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று (26.01.2023) தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
       திருச்சி
மாநகராட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த  4 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்கள்.     இம்மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் வார்டு குழு அலுவலகம், நகர் நல மையம் அலுவலர்கள் மற்றும்,  உதவிஆணையர், உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் , பணியாளர்கள் உள்ளிட்ட 16 நபர்களை கௌவுரவித்து பாராட்டி சான்றிதழ் மற்றும் சுழல் கேடயம் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் வழங்கி  அரசு பொருட்காட்சியில் மாநகராட்சி  சார்பாக சிறப்பான முறையில் காட்சியரங்கம் ஏற்படுத்தியமைக்கான இரண்டு நபர்களுக்கு விருது வழங்கினார்.

 எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழச்சி   நடைபெற்றது. கலை நிகழச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் வழங்கினார்.       
 பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய  மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள், காந்திமார்கெட் போர் வீரர்கள் நினைவு  தூணிற்கு மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தி  காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
         திருச்சி
           மாநகராட்சி சார்பில் நடைபெற்ற  குடியரசு  தின நிகழ்ச்சிகளில் நகரப்பொறியாளர் திரு.ப.சிவபாதம், நகர் நல அலுவலர் திரு.த.மணிவண்ணன், மண்டலத்தலைவர்கள் திருமதி. ஆண்டாள்ராம்குமார், திரு.மு.மதிவாணன், திருமதி.துர்காதேவி, திருமதி.விஜயலட்சுமி கண்ணன், திருமதி. பு.ஜெயநிர்மலா, செயற் பொறியாளர்கள் திரு.ஜி.குமரேசன், திரு.கே.பாலசுப்ரமணியன், துணைஆணையர் திரு.எம்.தயாநிதி, உதவிஆணையர்கள் திரு.சி.பிரபாகரன், திரு.ச.நா.சண்முகம், திரு,ப.ரவி,திரு.அ.அக்பர்அலி, திருமதி.மீனாட்சி, திரு.இரா.சதீஸ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web