முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்!! பிரதமர் இரங்கல்!!
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் உடல் நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75. அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சரத் யாதவ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர். நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தில் இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீது உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார்.ஆனால் இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை தொடங்கி இதன் மூலம் முந்தைய ஜனதா தளத்தின் பல்வேறு கிளைகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் ஹரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pained by the passing away of Shri Sharad Yadav Ji. In his long years in public life, he distinguished himself as MP and Minister. He was gr eatly inspired by Dr. Lohia’s ideals. I will always cherish our interactions. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) January 12, 2023
இவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில் "சரத் யாதவ் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., மற்றும் அமைச்சர் என அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்கள், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!