காதலியை 51 இடங்களில் ஸ்குரூ டிரைவரால் குத்திக் கொலை!! பேச மறுத்ததால் காதலன் வெறித்தனம்!!

 
நீல்குஷ்

பார்க்காமலே  காதல், பேசாமலே காதல் எல்லாம் மலையேறி விட்டது. தற்போதைய காதல் எல்லாம் சொல் பேச்சு கேட்காத காதலனுக்கு விஷம், காதலியை கொடூரக் கொலை என இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூர் பகுதியில் வசித்து வருபவர் துத்ராம் பன்னா. இவரது மகள்  20வயது  நீல்குஷம். இவர்   கடந்த 3  ஆண்டுகளாக  பேருந்து நடத்துநரான ஷபாஷ் கானை காதலித்து வந்துள்ளார்.  இதையடுத்து ஷபாஷ் கானும், நீல்குஷமும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். குஜராத்தில் இருந்தவாறு நீல்குஷிடம் பேசி வந்துள்ளார்.


ஆனால், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் ஒரு கட்டத்தில் ஷபாஷ் கானுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் காதலனின்  செல்போன் அழைப்புகளை ஏற்காமலும், வாட்ஸ்-அப்பில் பிளாக் செய்தும் உள்ளார். அதன் பிறகு அதே ஊரில் மற்றொருவருடன் பழக்கம் ஏற்பட்டு விட்டது.  ஷபாஷ் கானுடன் பேசுவதை நிறுத்திய நீல்குஷ் அந்த இளைஞருடன் பேசி வந்துள்ளார்.நீல்குஷ் தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ஷபாஷ் கான் தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார். தன்னிடம் பேசும்படி நீல்குஷுக்கும், அவளது  பெற்றோருக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் ஷபாஷ் கான் சத்தீஷ்கரின் ராய்ப்பூர் வந்துள்ளார். ராய்ப்பூரில் இருந்து சொந்த ஊரான பிலாஸ்பூரில் ஷபாஷ் கான் நீல்குஷ் வீட்டிற்கு சென்றான். 

நீல்குஷ்


வீட்டில் நீல்குஷ் மட்டுமே தனியாக இருந்துள்ளார். அப்போது, தன்னை காதலிக்கும்படியும், தொடர்ந்து தன்னிடம் பேசும்படியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷபாஷ் கான் தான் கொண்டு வந்த ‘ஸ்குரு டிரைவரால்’ நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். நீல்குஷ் கத்தி கூச்சலிடாமல் இருக்க தலையணையால் அவரது முகத்தை அழுத்தி பிடித்தான்.நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் ‘ஸ்குரு டிரைவரால்’ ஷபாஷ் கான் 51 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நீல்குஷ் கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். நீல்குஷை கொலை செய்த பின் ஷபாஷ் கான் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

போலீஸ்

வெளியே சென்ற நீல்குஷின் சகோதரன் நீலீஸ் மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது சகோதரி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நீல்குஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் நீல்குஷின் உடலில் 51 இடங்களில் ஸ்குரு டிரைவரால் குத்தப்பட்டிருப்பதும், மார்பு பகுதியில் மிகப்பெரிய அளவில் கொடூர காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலையை செய்த பின் தப்பியோடிய ஷபாஷ் கானை 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web