மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

அதிலும் டிசம்பர் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. இந்த உயர்வு நடுத்தர வர்க்கத்தினர், முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இனி தங்கம் வாங்கவே முடியாதோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

தங்கம்

இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான். இதனை ஒரு பெரும் சேமிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சற்றே குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் ஆறுதல் அடைந்தனர். அதன் தாக்கம் குறையும் முன்பே இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு மேலும் ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,045க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.40 448க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5056ஆகவும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ40448க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில்  வெள்ளி விலையின் விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 73க்கும், ஒரு  கிலோ வெள்ளியின் விலை ரூ.73000ஆகவும் இருந்து வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web