தங்கம் விலை சரிவு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தங்கம்

இன்று முதல் தை மாதம் வளர்பிறை. வரிசையாக முகூர்த்தங்கள், திருமணங்கள், சுபநிகழ்வுகள் களைகட்ட தொடங்கி விட்டன. ஆனால் தங்கம் மட்டும் தான் ஆட்டம் காட்டி வருகிறது. விசேஷத்துக்கு தேவையான எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு . நகைக்கடை பர்ச்சேஸ் மட்டும் தான் பாக்கி என இல்லத்தரசிகள் அங்கலாய்க்கின்றனர். அவர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் இந்த வாரம் முழுவதுமே தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இன்றைய தினம் சற்றே குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,320க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ரூ.42,560க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி இன்று வெள்ளியின் விலை, கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.30க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 குறைந்து ரூ.74,300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து   ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,325க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,600க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. இந்நிலையில்,  கடந்த சில நாட்களுக்கு முன்  ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5200யைத் தாண்டியது.   தமிழகத்தை பொறுத்தவரை நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருவது தங்கம் தான். இல்லத்தரசிகள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்துவருவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எங்கெங்கோ வீடு, மனை, சென்னைக்கு மிக அருகில் என திருச்சி வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களும் தங்கத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்துள்ளனர். தங்கத்தை பொறுத்தவரை விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான்.

தங்கம்

 நடுத்தர மக்கள் இனி நம்மால் தங்கத்த வாங்கவே முடியாதோ, கண்ணால தான் பார்க்கணும் என புலம்புவதை கேட்க முடிகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம்!! சவரனுக்கு ரூ240 அதிகரிப்பு!!
அதிலும் டிசம்பர் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. இந்த உயர்வு நடுத்தர வர்க்கத்தினர், முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இனி தங்கம் வாங்கவே முடியாதோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான். இதனை ஒரு பெரும் சேமிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web