கோல்டன் குளோப் விருது பெற்ற கித்தார் இசைக்கலைஞர் காலமானார்!!
கித்தார் இசை வரலாற்றில் பிரபலமான கலைஞர்களில் ஒருவர் ஜெஃப் பெக். இவருக்கு வயது 78 . இவர் பாக்டீரியா மூளைக்காய்ச்சல் காரணமாக ஜனவரி 10ம் தேதி உயிரிழந்தார். ஜெஃப் பெக் 1944ல் இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் 1960 முதல் யார்ட்பேர்ட்ஸ் குழுவில் பல இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஜெஃப் பெக் அனைத்து வகையான இசைக்கருவிகள் ஆல்பங்கள், இசை நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெற்றவர்.
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
1975ல் தனி இசை வாழ்க்கையை ‘ப்ளோ பை ப்ளோ’ என்ற ஆல்பத்தில் மூலம் தொடங்கினார். இந்த ஆல்பம் மூலம் அவரது இசையின் பார்முலாவை மறுகட்டமைத்து ஜாஸ் முதல் ராக் மற்றும் ஃபங்க் வரையிலான இசைகளில் வித்தியாசமான முறைகளை கையாண்டதில் பெரும் வெற்றி பெற்றார். ‘ப்ளோ பை ப்லோ’ பில்போர்டு டாப் 5 ஆகிய இசை ஆல்பங்கள் ஒரு மில்லியனிற்கும் அதிகமான பிரதிகள் விற்றன.
வெள்ளி, தங்கம் அல்ல பிளாட்டினம் வெற்றியை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். கித்தார் இசை வரலாற்றில் மிகவும் திறமையான ஜெஃப் பெக், தெற்கு இங்கிலாந்தில் உள்ள கிராமப்புற தோட்டமான ரிவர்ஹாலில் மருத்துவமனையில் உடல் நலக் குறைபாட்டால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. இதையும் படிச்சு பாருங்க.. விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அவர் பாக்டீரியா மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் மெலிசா டிராகிச் ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார். ஜெஃப் பெக் பல கிராமிய விருதுகளையும், கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!