பெரும் சோகம்.. வீட்டுக்குள் ஒரே குடும்பத்தில் நான்கு பேரின் சடலங்கள்.. அச்சத்தில் மக்கள் !!

 
ஜம்மு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. 

காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்துக்கு உட்பட்ட பலிகோட்டில் செயின் சிங் (67) - சங்ரி தேவி (62) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு, சோனிகா தேவி (40), டெஷா தேவி (30) என்ற இரு மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் இவர்களது வீட்டில் இருந்து நேற்று யாரும் வெளியே வரவில்லை.
ஜம்மு
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சிங்கின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சோனிகா தேவியை தவிர மீதமுள்ள 3 பேரும் பிணமாக கிடந்தனர். மயக்க நிலையில் கிடந்த சோனிகாவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஜம்மு
பனியால் மூடப்பட்ட வீட்டுக்குள் பிணமாக கிடந்த இவர்கள் 4 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் அவர்கள் பராமரித்துவந்த சில விலங்குகளும் இறந்து கிடந்தன. எனவே இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு காரணங்கள் எதுவும் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காஷ்மீரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
From around the web