குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!! டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்!!

 
டிஎன்பிஎஸ்சி

நவம்பர் 19ம் தேதி  குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் மூலம் துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குநர் ஆகிய 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டன.  முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

டிஎன்பிஎஸ்சி
அந்த வகையில், முதல்நிலைத் தேர்வு தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 38 மையங்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடத்தப்பட்டது. 92 பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் மொத்தமாக 3,22,414 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் சுமார் 1.91 லட்சம்பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அதாவது 59,23% பேர் மட்டுமே.

டிஎன்பிஎஸ்சி

இந்நிலையில், நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகள்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இவைகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  4 வினாக்கள் தவறுதலாக கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web