15 மாவட்டங்களில் மட்டுமே குரூப் 3 ஏ தேர்வு மையங்கள்!! உங்க மாவட்டம் இருக்கா?! செக் பண்ணிக்கோங்க!!

 
டிஎன்பிஎஸ்சி

 தமிழகத்தில் அரசு பணிகளுக்கான இடங்கள் அனைத்து அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த வகையில் குரூப் 3ஏ தமிழகம் முழுவதும்   15 மாவட்டங்களில் நடத்தப்படும் என தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான அதாவது குரூப் 3ஏக்கான தேர்வு 2023 ஜனவரி28ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.   தற்போது 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில், கோவை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ஊட்டி, திருச்சி, வேலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம் மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் குரூப் 3ஏ தேர்வுகள் நடைபெறும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web