ஜனவரி 11 ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! கொண்டாடுங்க மாணவர்களே!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஒவ்வொரு வருடமும் தியாகராஜர் ஆராதனை விழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான தியாகராஜர் ஆராதனை விழா இன்று ஜனவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. விழாவை புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கிறார். ஜனவரி 10ம் தேதி வரை பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆராதனை விழா ஜனவரி 11ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். காலை 9 மணிக்கு நடைபெறும் ஆராதனை விழாவில் 500க்கும் மேற்பட்ட கர்நாடக இசை கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தனம் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்துவர். இந்த கீர்த்தனைகள் மூலம் தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அன்றையதினம் இரவு 10.30 க்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடையும்.
இந்நிலையில், தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தஞ்சாவூரில் ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் எனவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!