அடக்கொடுமையே!! ஒரு இளைஞரை 4 பெண்கள் கூட்டுபலாத்காரம்!!
பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தரில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இளைஞர் ஒருவர் நைட் ஷிப்ட் முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே ஒரு கார் ஒன்று உரசி கொண்டு சென்றது. அதில் 20 லிருந்து 25 வயதுக்குள் 4 இளம்பெண்கள் இருந்தனர். அவர்கள் 4 பேரும் அந்த இளைஞரிடம் முகவரி விசாரித்தனர். அப்போது இன்னொரு பெண் அவர் முகத்தில் ஏதோ ஸ்பிரே ஒன்றை அடிக்க உடனே அந்த இளைஞர் மயங்கி விட்டார். அந்த பெண்கள் அந்த இளைஞரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு பறந்தனர்.
மறைவான இடத்தில் காரை நிறுத்தி அவரது கை, கால்களை கட்டி போட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். குடிக்க வற்புறுத்தினர். 4 இளம்பெண்களும் மாறி மாறி தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த இளைஞர் கண்ணீருடன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தனர். ஆங்கிலத்திலும், பஞ்சாபிலும் பேசினர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இளம்பெண்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் இது போல் ஒரு ஆணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களையும் சிறுமிகளையும் கடத்திச் சென்று தான் பலாத்காரம் செய்து வரும் நிலையில் ஆண் ஒருவரை இளம்பெண்கள் கூட்டாக பலாத்காரம் செய்தது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!