நான் உயிரோட தான் இருக்கிறேன்! என் மகன் நல்லவன்.. பாலிவுட் நடிகை பரபரப்பு பேட்டி!

 
வீணா

நான் இன்னமும் உயிரோட தான் இருக்கேன். என் மகன் ரொம்ப நல்லவன். ப்ளீஸ்.. தவறான செய்தியைப் பரப்பாதீங்க என்று பிரபல  பாலிவுட் நடிகை வீணா கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது  74 வயதாகும் நடிகை வீணா கபூரை, அவரது மகன் சொத்துக்காக கொலைச் செய்து விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி பரவிய நிலையில், பலரும் நடிகை வீணா கபூர் வீட்டிற்கு செல்ல துவங்கினார்கள். பல பாலிவுட் படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் வீணா கபூர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

வீணா கபூரை அவரது மகன் சச்சின், பேஸ்பால் மட்டையால் தலையில் பலமுறை அடித்து கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில்  வீணா கபூரின் மகன் சச்சின், மற்றும் அவரது வீட்டின் பணியாளர் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டது. இதனால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. 

வீனா கபூர்
ஆனால் உண்மையில் பாலிவுட் நடிகை வீணா கபூர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் எனவும், தான் உயிரோடு இருப்பது குறித்து காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த புகாரில்  வீணா கபூர் என்ற பெயரில் மற்றொரு பழம்பெரும் பாலிவுட் நடிகை இருப்பதாகவும், ரசிகர்கள் பலரும், உயிரிழந்த வீணா கபூரை குழப்பி, உயிருடன் இருப்பவருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  ஊடகங்களும் தவறாக அவரின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 

வீணா கபூர்
என்னை யாரும் கொலை செய்யவில்லை . நான் இறந்து விட்டதாக என்னிடம் விசாரிப்பது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  தன்னை தனது மகன் அடித்து கொலை செய்ததாக பரவிய தகவலில் சிறிதும் உண்மையில்லை. தனது மகனை கொலையாளி என குற்றஞ்சாட்டுவதால் அவனுக்கு யாரும் வேலை கொடுக்க மறுக்கிறார்கள்  எனத் தெரிவித்துள்ளார்.

வீணா கபூரின் மகன் அபிஷேக் சத்தா இது குறித்து விடுத்த செய்திக் குறிப்பில்  "என் அம்மாவை நான் கொலை செய்தேன் என்கிறார்கள். என் அம்மாவை எனக்கு நிறைய பிடிக்கும் அவர்களை நான் நேசிக்கிறேன்.  நான் கனவில் கூட அப்படி நினைக்க மாட்டேன்.  இதனை சமூக வலைதளங்களில்  பார்த்த எனக்கு  உடல்நிலை சரியில்லாமல் போனது. தயவு செய்து யாரும் இது குறித்து வதந்திகளை பரப்பாதீர்கள்.  என் அம்மா உயிருடன் இருக்கிறார், நான் அவரை கொலை செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web