மணல் லாரி ஏறியதில் ஐடி பெண் ஊழியர் பலி!! தம்பியை பள்ளியில் விடச் சென்ற போது சோகம்!!
சென்னையில் போரூரில் வசித்து வருபவர் 22 வயது ஷோபனா . இவர் ஸோகோ என்ற தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மதுரவாயல் சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு இருந்த பள்ளத்தை கவனிக்கவில்லை. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
One of our engineers, Ms. Shobana died tragically when her scooter skidded in the heavily potholed roads near Maduravoyal in Chennai. She was taking her younger brother to school.
— Sridhar Vembu (@svembu) January 3, 2023
Our bad roads have caused a
tragic loss to her family and Zoho. https://t.co/8XAycPhIsk pic.twitter.com/JlX5roD6DS
பின்னால் வந்த மணல் லாரி ஷோபனா மீது ஏறிவிட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் ஷோபனாவின் தம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஸோகோ நிறுவன சிஇஓ எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஷோபனா சாலை விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது மோசமான சாலைகளால் ஷோபனாவின் குடும்பத்திற்கும், ஸோகோ நிறுவனத்திற்கும் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மென்பொருள் நிறுவன ஊழியர் சாலைவிபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!