மீண்டும் அதிகரித்த தங்கம்!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அதிலும் டிசம்பர் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. இந்த உயர்வு நடுத்தர வர்க்கத்தினர், முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இனி தங்கம் வாங்கவே முடியாதோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான். இதனை ஒரு பெரும் சேமிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்திருந்தது.
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து ரூ.5,115க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து, ரூ.40,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 74.50க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!