அதிகரிக்கும் கொரோனா! பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!

 
மோடி பிஎம் கேர்ஸ்

சீனா, ஜப்பான், அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளில் புதுவகையான கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். 

ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள் தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அடுத்து மூன்று மாதங்களில் 20 லட்சம் பேர் வரை இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் உயிரிழக்க நேரிடலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் ஒருவர் இந்த புதுவகையான வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

இந்தியாவில் 3 பேருக்கு இந்த புதுவகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது மேலும் பீதியைக் கிளப்பி வருகிறது.

சீனா கொரோனா

சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் இந்த புதுவகையான வைரஸ் பரவ துவங்கியுள்ளது. 
இந்நிலையில், பிரதமர் மோடி புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படுவது குறித்தும், இந்தியாவில் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web