கள்ளக்காதலுக்கு இடையூறு.. ‘பாபநாசம்’ பட பாணியில் கணவரைக் கொன்று, புதைத்து கட்டிடம் எழுப்பிய மனைவி!

 
நீத்து

’பாபநாசம்’ பட பாணியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால், தனது கணவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கணவரைக் கொலைச் செய்ததுடன், கள்ளக்காதலனின் உதவியுடன் அருகில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தில் புதைத்து விட்டு, மேலே கழிவு நீர்த் தொட்டி கட்டியது டெல்லியை அதிர செய்துள்ளது.

டெல்லி அருகே காஜியாபாத் நகரில் வசித்து வந்த தம்பதியர் நீத்து சதீஷ்பால். இவர்கள் இருவரும் தனியே வசித்து வந்த நிலையில், சதீஷ்பாலில் சகோதரர் சோட்டேலால், கடந்த ஜனவரி 10ம் தேதி, தனது சகோதரர் சதீஷ் பாலை (42)   கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். சதீஷ் பால் காணாமல் போய் ஒரு வாரமாகியும், வேறு பகுதியில் வசிக்கும் சகோதரர் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், கணவரைக் காணவில்லை என மனைவி ஏன் புகாரளிக்கவில்லை என்கிற சந்தேகத்துடன் போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். ஆனால் அவர்களால் உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

murder

இந்நிலையில் நீத்துவையும், காணாமல் போன அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி ஹர்பால் என்பவர் வந்து சந்தித்துச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ஹர்பாலைப் பிடித்து விசாரித்த போலீசார், உண்மையைக் கண்டறிந்துள்ளனர். சதீஷுக்குப் பழக்கமான ஹர்பால், அடிக்கடி சதீஷ் வீட்டு வந்த நிலையில், நீத்துக்கும் ஹர்பாலுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவரைக் கொன்று விட்டு, இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழலாம். தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறு இருக்காது. நிஜக் காதலாக மாற்றிக் கொள்ளலாம் என இருவரும் முடிவெடுத்துள்ளனர். சதீஷைக் கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக் கொள்ள ஹர்பால் முடிவெடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி 2ம் தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு, நீத்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்தார். அவர் ஆழ்ந்து உறங்கியதும் நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து சதீஷின் கழுத்தை நெரித்து கொலைச் செய்துள்ளனர்.  கள்ளக்காதலன் ஹர்பாலும், அவரது நண்பர் கவுரவும் கொத்தனார்களாக வேலைப் பார்த்து வருபவர்கள். அதனால், நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை அவர்கள் கட்டிக் கொண்டிருந்தனர். அங்கேயே சதீஷின் உடலைப் புதைக்க இருவரும் தீர்மானித்தனர்.

Bangladeshi-Teen-Arrested-While-Sneaking-Into-India

அதன்படி உடலை தரதரவென்று இழுத்துச் சென்று அங்கு புதைத்தனர். பின்னர் அதன் மீது கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்க்) கட்டி விட்டனர். கள்ளக்காதலனின் வாக்கு மூலத்தில் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று போலீசார் செப்டிங் டேங்கை உடைத்தனர். புதைக்கப்பட்டிருந்த சதீஷின் உடல் பாகங்களை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலனுடன் நீத்துவையும் கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள நண்பர் கவுரவை தேடி வருகின்றனர்.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web