காதல் ஜோடி தற்கொலை !! சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!
குஜராத் மாநிலத்தில் கணேஷ், ரஞ்சனா காதல் ஜோடி இருவரின் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் இருவரும் வாழ்வில் தான் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேர்வோம் எனக் கருதி ஆகஸ்ட் 2022ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் இருவரின் பெற்றோரும் பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர்.
பிள்ளைகள் விட்டுவிட்டு போனபிறகு அவரின் இழப்பை பெற்றோர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. மரணம் வரை போவார்கள் எனத் தெரிந்தால் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கலாமே என பதைபதைத்தனர். அதை செயல்படுத்தும் வகையில் முதலில் இருவரின் உருவச்சிலைகளும் செய்யப்பட்டன.
அந்த சிலைகளுக்கு நாள் , நட்சத்திரம் பார்த்து உற்றார், உறவினர்களை அழைத்து சிலைகளுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். இது குறித்து அவர்களின் பெற்றோர்கள் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசித்ததை பார்த்தோம். இறப்பிலாவது அவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். இப்போது தான் எங்கள் மனம் ஆறுதல் அடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!