உலக ஆணழகன் போட்டி!! 5 முறை சாம்பியன் பட்டம் வென்று தமிழக இளைஞர் சாதனை!!
உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக தமிழர் ஒருவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். சென்னை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மணி. இவர் மாடம்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். இதனிடையே தாய்லாந்து நாட்டில் உள்ள புகேட் நகரில் நேற்று உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது.

இதில் உலகம் முழுவதிலும் இருந்து 44 நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. இந்த போட்டியில் 'ஹெவி வெயிட்' பிரிவில் 100 கிலோ எடை கொண்ட போட்டியாளர்களுக்கான பிரிவில் ராஜேந்திரன் மணி கலந்து கொண்டார். போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இறுதியில் ராஜேந்திரன் மணி ஐந்தாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தார். ஏற்கனவே இந்தியாவுக்காக இவர் நான்கு முறை உலக ஆணழகன் பட்டம் பெற்றுள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக ஆணழகன் பட்டம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் மணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
